“மது அருந்துதல்
உடல் நலத்திற்கு கேடு”, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு”
அன்றுதான் தமிழ் கீச்சர்களின் மெஹா ட்விட்-அப் நடந்தது. ட்விட்-அப் நடக்கும்போது
தண்ணி பாக்கெட், மைக் செட் செக் பண்றது, அவுங்க உக்கார்றதுக்கு சேர் துடைச்சு
போடுறது இந்த மாதிரி வேலை பண்றதுக்காக சனியனையும் (@SelvaaRocky) கூப்பிட்டாங்க. அப்போதுதான் முதன் முதலில் சனியன்
பிரபல கீச்சர் திருக்குமரனை (@ThirutuKumaran) சந்திக்கும்
பாக்கியம் கிடைத்தது. குமரன் சனியனிடம் போய் தண்ணி இருக்கான்னு கேட்டான் சனியன்
இருக்குன்னு சொல்லி தண்ணியை குடுத்தான், அதுக்கு குமரன்; யோவ் அடிக்கிறதுக்கு தண்ணி
கேட்டா குடிக்கிறதுக்கு குடுக்கிற, இதுக்குத்தான் நான் இந்தியாவுக்கே வர்றதில்ல,
இதுவே “மஸ்கட்டா” இருந்தா இந்நேரம் ஃபுள் குடுத்து குளிக்கவே
வச்சிருப்பாங்க, சத்தம் கேட்டு அடுத்த பிரபல கீச்சர் கில்லி (@iGhilli) வந்து என்னாச்சு மச்சின்னு கேட்டான்; (வேற யாரும்
கண்டுக்கவே இல்லை ஏன்னா எல்லாரும் கடலை வறுத்திங், கில்லி உத்தமன் அவனுக்கு
இதெல்லாம் புடிக்காது) சனியன் அழுதிட்டு நடந்ததை சொன்னான். உடனே கில்லி
பாக்கட்டில் இருந்த குவாட்டர் பாட்டில எடுத்து குமரனை காணாமல் சனியன் பாக்கட்டில்
போட்டிட்டு குடுக்க சொன்னான் (கில்லி உத்தமனாமாம்), சனியனும் கொண்டு போய் குடுத்தான்.
அப்பத்தான் குமரனின் முகம் சற்று பிரகாசம் ஆனது.
குவாட்டர் அடிக்கிற வரைக்கும் “எமதர்மனா”
இருந்த குமரன் இப்போ “போதை தர்மன்” ஆயிட்டான், போதையில அவனுடைய
காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிச்சான், அதை கேட்டிட்டு இருக்கும்போதே கில்லி மானஸ்தன் தூங்கிட்டான்.
சனியன் தனியா மாட்டிட்டான். ஒரு பக்கம் பிரபலங்கள் ட்விட் அப் நடக்க இன்னொரு
பக்கம் குமாரனோட கிக்அப் நடந்திட்டு இருந்திச்சு. யாராவது பாக்கிறதுக்கு முன்னாடி
இங்க இருந்து சீக்கிரம் கிளம்பி ஆகணும்னு சனியன், எல்லர்க்கிட்டையும் அவசரமா கிளம்பணும்னு
சொல்லிட்டு கிளம்ப இன்னொரு பிரபல கீச்சர் (பேர் சொல்ல விரும்பாதவர்) ஒரு ரூ.1000/- எடுத்து நீட்டினார் இந்தா
நிறைய வேலை பாத்து கஷ்டப்பட்ட வச்சுக்கோ; சுத்தி சுத்தி பார்த்தான் யாரும்
கவனிக்கல வாங்கி பாக்கட்டில் போட்டான். அப்பிடியே ஒரு வழியா ஒரு ஹோட்டல்ல ரூம்
போட்டு ரெண்டு போரையும் குளிப்பாட்டி படுக்க வச்சான்.
அடுத்தநாள் போதை தர்மர்கள் படுக்கைய விட்டு
எழுந்து சனியன்கிட்ட கேட்ட முதல் கேள்வி; மச்சி இங்க பக்கத்தில சரக்கு எங்க
கிடைக்கும்? அதுக்கு கில்லி யோவ் குமரா முதல்ல பல்லு தேச்சு குளிச்சு ரெடி ஆகுயா நானும்
வர்றேன் சேர்ந்தே போவோம். அதுக்கு குமரன்; இதுதான்யா இங்க நம்ம பயலுங்க பிரச்சனையே
மஸ்கட்டில நாங்க எல்லாம் பல்லே தேய்க்கிறது கிடையாது வெறும் Mouth Freshner—தான் சும்மா
வாயில போட்டா போதும் இங்க மட்டும்தான் காலையில எந்திரிக்கணுமாம் பல்லு
தேய்க்கணுமாம், குளிக்கணுமாம் ஒரே குஷ்டமப்பா... சனியன் இதெல்லாம் கேட்டுக்கிட்டு
கோவப்படுறதா, சிரிக்கிறதா ஒண்ணுமே தெரியாம வெறப்பா நின்னுட்டு இருந்தான்.
மூணு பேரும் ரெடியாயி பக்கத்தில இருக்கிற
சரக்கு கடைக்கு போனாங்க. நாக்கு தள்ளுற வரைக்கும் குடிச்சிட்டு குமரன் அவனுடைய
மஸ்கட்டில் பிஸ்கட் விற்கும் கதைய ஆரம்பிச்சான்; கில்லி ரோஷக்காரன் திருட்டுகுமரனை
பேச விடாம தொடர்ந்தான்; மச்சி நீ விடுமுறைக்கு மஸ்கட்டில் இருந்து வந்திருக்க,
இந்த விடுமுறைய நீ வாழ்நாள் முழுவதும் மறக்ககூடாது எங்கையாவது போவோமா சொல்லு நான்
கூட்டிட்டு போறேன்னு சொன்னான். உடனே சனியன் சொன்னான் மச்சி நாம மூணு பேரும்
சேர்ந்து கோவிலுக்கு போவோம்,
கில்லி: ஆமாம் மச்சி
கோவிலுக்கு போவோம் அங்க சூப்பர் ஃபிகருங்கல்லாம் வரும் என்ன சொல்ற? (ம்க்ம்ம்ம் சனியன் எதுக்கு கூப்பிட்டான்
இவன் எதுக்கு கூப்பிர்றான் பாருங்க)
குமரன்: யோவ் நீங்களே
முடிவு பண்ணிட்டா அப்புறம் எதுக்குயா எங்கிட்ட கேட்டீங்க நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வாங்க நான்
வரலை.
கில்லி: சரி அப்போ நீயே
சொல்லு.!
குமரன்: மாம்ஸ் ரொம்ப
நாளா எனக்கு”நமீதா”வை சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்குயா என்னை கூட்டிட்டு போறீயா??
சனியன்: யோவ் மாம்ஸ்
மஸ்கட்டுக்கு திரும்பி போக ஆசையா இல்லையா, “நமீதாவை” சுத்தி
பாக்கணும்னா கொறஞ்சது மூணு, நாலு நாளாவது ஆகுமே...!!
கில்லி: அதுவும் சரிதான் மச்சி
கொறஞ்சது அவன் சொல்றமாதிரி மூணு நாலு நாளாவது
ஆகும் பரவாயில்லையா..?
திருக்குமரன்: அதெல்லாம்
எனக்கு தெரியாது ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டிட்டு போறீங்க இல்லாட்டி நான்
ஊருக்கு கெளம்புறேன்.
கில்லி: கோச்சுக்காத மச்சி உனக்கு பிரச்சனை இல்லைன்னா
எங்களுக்கு என்ன பிரச்சனை நாங்க வெட்டியாத்தான் இருக்கோம்.
(பேசிட்டு
இருக்கும்போது போதையில் திருட்டுகுமரன் டேபிள்ல சாஞ்சிட்டான்)
கில்லி: யோவ் சனியனே
கிளம்புறதுக்கு எல்லாம் ரெடி பண்ணு. குறிப்பா ஒரு மூணு, நாலு நாளுக்கு தேவையான
பழங்கள், ஜூஸ், பிஸ்கட் எல்லாம் ரெடி பண்ணிக்கோ இந்தா இதுல ஒரு ரூ.15000/- இருக்கு குமரன்
பாக்கட்டில இருந்து சுட்டது வச்சுக்கோ. (அடப்பாவி இது வேறையா)
(அப்பிடியே
குமரனை தூக்கி டாக்ஸி புடிச்சு ரூமுக்கு கிளம்பிட்டாங்க)
சனியன்: யோவ் இதுல
இருக்கிற காசுக்கு “நமீதா”வோட வீட்டு வாசல் வரைக்கும் தான் போக முடியும். “நமீதா”
இருக்கிறது வீட்டுக்குள்ள பல செக்கிரியூட்டி தாண்டனும், பல வேலைக்காரிங்கள
தாண்டனும் இதுக்கெல்லாம் காசு வேணும்யா.
கில்லி: ஓகேடா மச்சி,
நான் குமரன் கிட்ட சொல்லி அரேஞ் பண்ணி தர்றேன். அவன்கிட்ட மஸ்கட்ல பிஸ்கட் வித்த காசு
நிறைய இருக்கும்.
சனியன்: இல்ல மச்சி
குமரன்கிட்ட கேட்டா தரமாட்டான் அங்க பாரு குமரன் போதையில தூங்கிட்டு இருக்கான்
அவன் பாக்கட்டில் இருக்கிற மிச்சத்தையும் சுட்டிரு அதுவே போதும்.
கில்லி: யோவ் என்னைய போய்
திருட சொல்லுற நான் எப்பிடி....
சனியன்: டேய் இப்போ கொஞ்ச
முன்னாடி குமரன் பாக்கட்டில சுட்டியே அதே மாதிரி நைசா அடிச்சிரு..
(கில்லியும் பாக்கட்டில் இருந்த மிச்சத்தையும் சுட்டு சனியன் கிட்ட
குடுத்திட்டான்)
அடுத்த நாள்
காலையிலேயே மூணு பேரும் சேர்ந்து கிளம்ப தயாராயிட்டங்க ஆனா குமரன் எதையோ தேடிட்டு
இருந்தான்.
கில்லி: என்னாச்சு மச்சி
என்ன தேடிட்டு இருக்க?
குமரன்: இல்லையா
பாக்கட்டில ஒரு ரூ 75000/ போல
வச்சிருந்தேன் அதை காணோம் அதான் தேடிட்டு இருக்கேன்.
சனியன்: பாக்கட்டில
அவ்வளவு காசு ஏன்யா வச்சிருந்த?
குமரன்: நேத்தைக்கு நாம
மூணு பேரும் சேர்ந்து நமீதாவ சுத்தி பாக்க போகலாம்னு முடி பண்ணினோம்ல நீங்க ரெண்டு
பேரும் வேற வெட்டியா இருக்கீங்க கையில காசு இருக்காது அதுக்குத்தான் காசு ரெடி
பண்ணி வச்சிருந்தேன் அதை காணோம்.
(கில்லி சனியனை
பார்த்து மொறச்சான்)
கில்லி: யோவ் மாம்ஸ் நீ
காசு நேத்தைக்கே எங்கிட்ட குடுத்திட்டையா நான் சனியன் கிட்ட குடுத்திட்டேன்
வேணும்னா சனியன் கிட்ட கேட்டு பாரு. (கில்லி எப்பிடியோ சமாளிச்சான்)
சனியன்: ஆமா மச்சி நீ
நேத்தைக்கே கில்லி கிட்ட குடுத்திட்ட மறந்திட்டியா...
குமரன்: ஓ அப்பிடியா.!!
அது ஒண்ணும் இல்ல எப்பவுமே ஃபாரின் சரக்கே அடிக்கிற எனக்கு இந்த லோக்கல் சரக்கு
ஒத்துக்கல அதான் மறந்திட்டேன். யோவ் சனியனே காசு பத்தலன்னா எங்கிட்ட கேளு என்ன...
சனியன்: ஓகே மச்சி,
(ரொம்ப நல்லவனா இருக்கானே இது தெரியாமா காசை ஆட்டைய போட ஐடியா குடுத்தோமே) அப்போ
கிளம்புவோமா...!!
மூணு பேரும்
நமீதா வீட்டு முன்னாடி வந்திட்டாங்க, சுமார் ரெண்டு கிலோ மீட்டர் தூரம் அளவு மதில்
சுவர் போடப்பட்டிருந்தது. கேட்டில் இரண்டு செக்கிரியூட்டி வேற, எப்பிடியும் உள்ள
விடமாட்டானுங்க எப்பிடி கேட்டை கடந்து உள்ள போறதுன்னு மூணு பெரும் தீவிர
யோசனையில்....
கற்பனையில் வாழும் உத்தமர்கள் @iGhilli, @SelvaaRocky, @ThirutuKumaran
கற்பனையில் வாழும் உத்தமர்கள் @iGhilli, @SelvaaRocky, @ThirutuKumaran
Photo by @krajesh4u |
குமரன்: மச்சி மதில்
சுவரே இம்புட்டு பெருசா இருக்கே அப்போ வீடு எம்புட்டு பெருசா
இருக்கும்ம்ம்ம்ம்ம்ம் அவ்வ்வ்வ்
கில்லி: யோவ் குமரா உள்ள
போறதுக்கு ஏதாவது ஐடியா குடுக்குறத விட்டுட்டு சும்மா காமடி பண்ணிட்டு இருக்க...??
சனியன்: அவனுக்கு என்ன
மச்சி ஈசியா “நமீதாவை” சுத்தி பாக்கணும்னு சொல்லிட்டான், அப்பிடி இப்பிடி எதாவது
ஆச்சுன்னா இவன் மஸ்கட்டில ஓடிருவான். நாமதான் மாட்டிக்கிட்டு முழிக்க போறோம்.
குமரன்: யோவ் ரெண்டு
பேரும் கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு... இப்போ கூட்டிட்டு போறீங்களா இல்ல நான்
ஊருக்கு கிளம்புறேன்..
கில்லி: இருயா கூட்டிட்டி
போறோம், ஆஊன்னா பெரிய ரோஷக்காரன் மாதிரி உடனே கோவப்படுறது.
சனியன்: சரி அப்போ நான்
போய் வாட்ச்மேன காசு குடுத்து கரெக்ட் பண்ணிட்டு வாறேன், ரெண்டு பேரும் ஓரமா போய்
நில்லுங்க போங்க போங்க.
ஒரு வழியா வாட்ச்மேனுக்கு
காசு குடுத்து உள்ள போறதுக்கு அனுமதி வாங்கிட்டு வந்தான் சனியன். மூணு பெரும்
சேர்ந்து உள்ள போனா அங்க தோட்டக்காரி, அவளுக்கும் காசு குடுத்து சமாளிச்சு மூணு
பேரும் சேர்ந்து உள்ள போயிட்டாங்க.
குமரன்: மச்சி வீடு ஏன்யா
இம்புட்டு பெருசா இருக்கு?
கில்லி: உள்ள யானை
குட்டி, பண்ணி குட்டி எல்லாம் இருக்குல்ல அதுங்க எல்லாம் நல்லா மேயனும்னுதான்
பெருசா கட்டி விட்டிருக்காங்க.
உள்ள நமீதாவோட
மேனேஜர் நின்னுட்டு இருந்தான், மூணு பெரும் வர்றதை பாத்து; என்ன வேணும் கேட்டான்.
குமரன்: நமீதா மேடத்த
சுத்தி பாக்கலாம்னு வந்தேங்கோ..
மேனேஜர்: என்னது சுத்தி
பாக்க வந்தீங்களா
சனியன்: இல்ல சார் வாய்
தவறி சொல்லிட்டான், நமீதா மேடத்த பார்த்திட்டு அப்பிடியே வீட்ட சுத்தி பாக்கலாம்னு
வந்தோம்.
மேனேஜர்: அதுக்கு நிறைய
ஃ”பார்”மாலிட்டீஸ் இருக்கு தெரியும்ல
குமரன்: தெரியும் சார்
அதுக்குத்தான் ஃபாரின் சரக்கு கொண்டு வந்திருக்கோம்.
மேனேஜர்: ஓகே ஓகே இங்க
உக்காருங்க மேடம் இப்போ வருவாங்க
கில்லி: சரிங்க
குமரன்: கேணப்பயன் பாரின்
பாட்டில்ல யூரின் ஊத்தி குடுத்தாலும் நம்பிருவானுங்க போல
சனியன்: யோவ் என்னய்யா
சொல்லுற.?
குமரன்: ஆமாயா பாரின்
பாட்டில்ல நம்ம ஊர் லோக்கல் சரக்குதான் ஊத்தி சீல் பண்ணி வச்சேன் நம்பிட்டான் ங்கொய்யால
யாருக்கிட்ட..
கொஞ்ச நேரம்
கழிச்சு மேனேஜர் வந்தான்
மேனேஜர்: சாரிங்க மேடம்
ஷூட்டிங் முடிச்சிட்டு நேரா ஏர்போர்ட்டுக்கு போயிருக்காங்க வெளிநாட்டில ஏதோ
ஷூட்டிங் இருக்காம்...
குமரன்: பரவாயில்லைங்க
நாங்க வெயிட் பண்ணுறோம்
மேனேஜர்: சாரி சார்
அவுங்க வர்றதுக்கு மூணு வாரமாவது ஆகும்..
குமரன்: யோவ் அதை
பாட்டில் வாங்குறதுக்கு முன்னாடி சொல்லக்கூடாதா
கில்லி: யோவ் குமரா
உணர்ச்சி வசப்படாத, சாரி சார் அவன் பாக்க முடியாத கோவத்துல அப்பிடி சொல்லிட்டான்
மேனேஜர்:
பரவாயில்லங்க..!!
சனியன்: விடு மச்சி
அடுத்த வாட்டி வரும்போது போன் பண்ணி கேட்டுட்டு வருவோம்
குமரன்: போங்கடா அயோக்கிய
ராஸ்கல்களா, இனிமே வாழ்க்கையில நமீதா படத்த கூட பாக்க மாட்டேன்டா காசு போனதுதான்
மிச்சம்.
மூணு பெரும்
வருத்தத்துடன் வாட்ச்மேன், வேலைக்காறி எல்லாரையும் மொறச்சு பாத்திட்டு,
கடுங்கோபத்துடன் வெளியேறினாங்க
வேலைக்காரன்: என்ன சார் மேடம் உள்ளதான் இருக்காங்க, நீங்க
இல்லைன்னு சொல்லிட்டீங்க.?!
மேனேஜர்: எவ்ளோ ஃபாரின்
சரக்கு (ஓசியில) சாப்பிட்டு இருப்பேன், என்னையே லோக்கல் சரக்கு குடுத்து ஏமாத்த
பாத்தாங்க இப்போ பாத்தியா வீட்டுக்குள்ள இருக்குற நமீதா மேடத்தையே இல்லைன்னு
சொல்லி ஏமாத்திட்டேன்......
வட போச்சே..!!
ஸ்கூல் படிக்குற காலத்தில் இருந்து சனியனும், திருட்டுகுமரனும் நமீதா விசிறிகள் என்பதை இங்கே சொல்லணும்னு தோணிச்சு
Photo by @krajesh4u |