Friday, August 17, 2012

பொண்ணு கை புடிச்சிழுக்கும் க(கெ)ட்டதொரை...!!!


      சந்தில் கடலை சாகுபடியின் மன்னன் நம்ம “கட்டதொரை”யின் லீலைகளில் ஒரு சில இது உங்களுக்காக. நேரம் இருந்தால் படிங்க, நேரம் இல்லாட்டியும் படிங்க நீங்க படிச்சா மட்டும் போதும், நீங்க படிச்சா மட்டும் போதும்.....!!!! 

     அன்று தான் கட்டதுரை அவங்க அப்பா, அம்மாவோட எங்க பக்கத்து வீட்டில குடி வந்த நாள். அப்பா சொல்லி தான் நான் கேள்வி பட்டேன், யாரோ பக்கத்து வீட்டில புதுசா குடி வந்திருக்காங்கன்னு, மூணாவது நாள் தான் நான் கட்டதொரையை முதல் முதலா பார்க்கிறேன். பேருக்கு ஏத்த மாதிரி வாட்ட சாட்டமா இருப்பான் நமக்கு கம்பெனிக்கு ஆள் ஆச்சேன்னு  எதிர்பார்த்தா, இப்பத்தான் நாலாம் வகுப்பு படிக்கிறானாம். (இன்னும் கை சப்புறதையே விடலைன்னா பாத்துக்கோங்க) சரி இந்த படிக்கிற சின்ன புள்ளைய கொண்டு ஏன் இவுங்க இப்பிடி திடீர்னு வீடு மாறி குடி வந்திருக்காங்கன்னு விசாரிச்சா, நம்ம கட்ட சின்ன வயசிலேயே லீலைகளின் மன்னனாம், சின்ன வயசிலேயே பக்கத்து வீட்டு பொண்ணுங்ககிட்ட குடுக்கிற அலப்பறைய தாங்க முடியாம தான் இந்த வீடு மாற்றமாம். சரி அதை விடுங்க இந்த குழந்தைக்கு ஏன் இப்பிடி பேரு வச்சிருக்காங்கன்னு விசாரிச்சா அதுக்கு வேற கதை, அதாவது எங்க எல்லாம் பொண்ணுங்க கூட்டமா கட்டம் போட்டு விளையாடுவாங்களோ அங்க எல்லாம் கட்டதொர கட்டம் ஆரம்பிச்சிருவாராம்.

     கட்டதொரயோட கதைய கேட்டு இம்ப்ரெஸ் ஆயி எப்பிடியாவது கட்டதொரைய நம்ம கேங்க்ல சேர்த்திர்லாம்னு தோணிச்சு. அடுத்தநாள் நான் காலேஜ் போக ரெடி ஆயிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டில் இருந்து கட்டதொரயோட அம்மா என்ன கூப்பிட்டு; “தம்பி இவனுக்கு ஸ்கூலுக்கு போக வழி தெரியல, நீ காலேஜ் போகும்போது இவனையும் கொண்டு போயி விட்டிடுப்பா” நானும் பின்னாடி வர்ற விளைவுகள் தெரியாமல் ஆமான்னு சம்மதிச்சேன். ஆனா கட்டதொர ஸ்கூலுக்கே போகமாட்டேன்னு அடம்பிடிச்சிட்டு இருந்தான். எல்லாரும் சொல்லி பாத்தாச்சு, கெஞ்சியும் பாத்தாச்சு ம்ஹும் நடக்கவே இல்லை. அப்புறம் நான் போய் சொன்னேன்; “டேய் கட்டதொர வாட, மாமா உன்ன தோளில தூக்கி வச்சு “கை வீசம்மா கை வீசு, கடைக்கு போகலாம் கை வீசு” பாட்டு பாடி கூட்டிட்டு போறேன்” அதுக்கு கட்டதொர; “எனக்கு அந்த பாட்டு வேணாம் “அண்டங்காக்கா கொண்டக்காரி” பாட்டுதான் வேணும் பாடுவியான்னு கேட்டான்?” (ம்க்ம்ம்... வில்லங்கத்த நானே தான் விலை கொடுத்து வாங்கிட்டேனோ) ஆமான்னு சம்மதிச்சேன். (வேற வழி)


அந்த புள்ளைய என்னத்த சொன்னானோ..!! #ரொமாண்டிக் லுக் பாருங்க...!!

Photo by @krajesh4u

     ஒரு வழியா தோளில தூக்கி வச்சுகிட்டு “அண்டங்காக்கா கொண்டக்காரி.. ரண்டக்கா, ரண்டக்கா”... பாட்டு பாடிக்கிட்டே தெருவில நடந்து போனேன், போறவங்க வர்றவங்க எல்லாரும் என்னையே பாக்கிறாங்க, ஏன்னா அந்த தெருவிலேயே கொஞ்சம் அமைதியான, அழகான, அறிவானா, ஸ்மார்ட்டான பையன் நான் தான். (ஓவராத்தான் போறேனோ, போவோம்,போவோம்) அடுத்த தெருவ கடக்கும்போது என் கூட காலேஜில் படிக்கிற பொண்ணுங்க என்ன பாத்து சிரிச்சுக்கிட்டே கடந்து போனாங்க, எனக்கு புரிஞ்சு போச்சு அது வேற ஒண்ணும் இல்ல, நான் தோளில ஒரு குட்டி சாத்தான சுமந்து போயிட்டு இருக்கேன்ல அதான் என்னப்பாத்து கிண்டலடிச்சிட்டு போறாங்கன்னு நினச்சேன். ஆனா காரணம் அதில்ல, க்ராஸ் ஆயி போன பொண்ணுங்கள பாத்து தோளில இருக்கிற நம்ம கட்டதொர சிக்னல் விட்டிருக்காருன்னு (அது காலேஜூக்கு போனதுக்கப்புறம் தெரிஞ்சது) அதை எல்லாம் தாங்கிக்கிட்டு நம்ம பக்கத்து வீட்டு பையன்தானே நாளைக்கு நமக்கு எதாவது தேவைன்னா (அதான் பக்கத்து வீட்டு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுக்கிறது அந்த மாதிரி) அவன்தானே பாத்துப்பான்னு மனச தேத்திக்கிட்டு திரும்பவும் நடந்தேன். ஏறக்குறைய ஸ்கூல் பக்கத்துல வந்துட்டேன், திடீர்னு என் தோள் ரொம்ப சூடாயிடுச்சு, என்னான்னு பாத்தா நம்ம கட்டதொர கெட்டதொரையா மாறி தோளிலேயே உச்சா போயிட்டாரு (ஆஹா இது வேறையா) இங்கேயே இறக்கி விட்டு தண்ணில அலசலாம்னா இவரு வேற அழுவாரு என்ன பண்றது, அப்பிடியே நடந்தேன். அப்பத்தான் ஸ்கூல் கடற்கரை பக்கத்தில இருப்பது ஞாபகம் வந்தது. கட்டதொரைய கடல் பாக்கிறதுக்கு கூட்டிட்டு போறமாதிரி கூட்டி போய் அங்க என்னோட சட்டைய துவச்சு காய வச்சிட்டேன். ஆனா கட்டதொர மட்டும் டவுசர கழட்ட சம்மதிக்கவே இல்ல. ஆனா கடல்ல விளையாடுனதில கட்டதொரைய அறியாமலையே டவுசர்ல தண்ணி பட்டு அழுக்கு போயிடுச்சு.

     சட்டை காஞ்சது (என் மனசும் சேர்ந்து காஞ்சிடுச்சு) எடுத்துப்போட்டுக்கிட்டு திரும்பவும் தோளில சுமந்து நடக்க ஆரம்பிச்சேன். ஒரு நிமிடம் நடந்ததெல்லாம் என் கண் முன்னாடி வந்து போச்சு. மனசுக்குள் அழுதேன்... (வெளியே காட்டிக்கவே இல்லையே) ஸ்கூல் வந்தது கட்டதொரைய தரையில இறக்கி விட்டிட்டு தப்பிச்சேண்டா சாமின்னு அங்க இருந்து ஓடிட்டேன். கரெக்டா ரெண்டு மணி நேரம் இருக்கும் பிரின்சிபால் ரூமில் இருந்து அழைப்பு வந்தது, என்னன்னு போய் பார்த்தா நம்ம கட்டதொரை உக்கார்ந்திருக்கான். பார்த்ததுமே உடம்பு உதறிடிச்சு, கட்டதொரை வேற ரொம்ப விவகாரமான ஆளு அதான், பிரின்சிபால் கிட்ட என்னான்னு கேட்டேன் அதுக்கு பிரின்சிபால்; காலைல வீட்டில சண்டை போட்டுட்டு வந்துட்டியாமே, அதான் உங்க அம்மா உன்னோட தம்பிய அனுப்பியிருக்காங்க, போய் பேசு; (அடப்பாவி நீ என் தம்பியா, எங்க அம்மாக்கிட்ட நான் சண்டை போட்டேனா) ஏதோ என்னை சுத்தி நடக்குதுன்னு புரிந்தது ஆனா என்னான்னு புரியல ஒரே குழப்பமா இருந்துச்சு. கட்டதொரைய தனியா கூப்பிட்டேன் என்னன்னு கேட்டேன் அதுக்கு அவன்; எங்க டீச்சர் கூப்பிட்டிட்டு வர சொன்னார்னு சொன்னான். எதுக்குனு கேட்டேன்; கிளாஸ் தேர்வில கம்மியா மார்க் எடுத்ததுக்கானான். டேய் ஸ்கூல் தொறந்ததே இன்னைக்கு தாண்டா அதுக்குள்ள மார்க் கம்மியா எடுத்தேன்னு வரச்சொன்னாங்களானு கேட்டேன், அதுக்கு முழிச்சிட்டு இருந்தான் சரி என்னான்னுதான் பாப்போம்னு தோணிச்சு. பிரின்சிபால்கிட்ட இருந்து அனுமதி வாங்கிட்டு ரெண்டு பேரும் கிளம்பினோம்.

     ஸ்கூலுக்கு உள்ள வந்ததும் ஹெட்மாஸ்டர் அறைக்கு கூப்பிட்டிட்டு போனான் அங்க ஹெட்மாஸ்டர் என்னை பார்த்து; ஏம்பா நீ இவனுக்கு யாருன்னு கேட்டார். அதுக்கு நான் கட்டதொரையோட தம்பின்னு சொன்னேன். (அப்பிடித்தானே சொல்லி வச்சிருக்கான்) அதுக்கு வாத்தியாரு; ஸ்கூலுக்கு வந்த முதல் நாளே 12-ம் வகுப்பு பொண்ணுக்கிட்ட நோட்புக் புடிங்கிட்டு ஓடியிருக்கான், அத கேட்கிறதுக்கு போன வாத்தியாரு வேட்டிய உருவிட்டு ஓடிட்டான், ஹெட்மாஸ்டர் வகுப்புக்கே போய் கூப்பிட போனா கல்லு விட்டு அடிச்சிருக்கான், வகுப்புக்கு வந்த முதல் நாளே இப்பிடியெல்லாம் பண்ணியிருக்கான் இந்த மாதிரி பையன எங்க ஸ்கூல்ல படிக்க வைக்க முடியாது எங்க ஸ்கூலுக்குனு ஒரு டிசிப்பிளின் இருக்கு ஆனா இந்த பையன் சச்சச்ச்ச.... எல்லா வாத்தியார் முன்னாடியும் தலை குனிஞ்சு நின்னேன்வேற வழி, ஆனா அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாம பாக்கட்டில் இருந்த குச்சி மிட்டாய எடுத்து சாப்பிட்டிட்டு இருந்தான் நம்ம கட்டதொரை. ஒரு வழியா எல்லா வாத்தியார்க்கிட்டையும் மன்னிப்பு கேட்டுட்டு இனிமே இந்த மாதிரி நடக்காதுன்னு சொல்லிட்டு கட்டதொரைய வகுப்புல விட்டிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

     போகும் வழியில் யோசிச்சிட்டே போனேன், இத்தன வருஷம் படிச்ச நானே இதுவரைக்கும் ஒரு நாள் கூட வீட்டில இருந்து யாரையும் கூப்பிட்டிட்டு வந்தது கிடையாது (ம்க்ம்ம்ம் அது எனக்குத்தானே தெரியும்) ஆனா இந்த கட்டதொரை முதல் நாளே என்னை இப்பிடி அசிங்க படுத்திட்டானே. இதுக்கப்புறமும் கட்டதொரைக்கு பக்கத்து வீட்டில காலம் முழுவதும் இருக்கணும்னா அய்யய்யோ.... நினச்சு கூட பார்க்க முடியல. சாயங்காலம் வீட்டுக்கு போனேன். யார்க்கிட்டையும் நடந்த எதையும் சொல்லல. அன்னைக்கே வீட்டை காலி பண்ண ஏற்பாடு பண்ணிட்டு (இப்போ சந்தோசமாயா) அடுத்த நாள் யாருக்கும் தெரியாம குறிப்பா கட்டதொரைக்கு தெரியாம நாங்க பொறந்த ஊரைவிட்டே கெளம்பி போயிட்டோம்...

     இந்த கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனை மட்டுமே என்று நீங்கள் எடுத்துக்கொண்டால் அது தவறு....!!


கட்டதொரையின் உரிமையோடு “சனியன் சகட” எழுதிக்கொண்டது :-))
  

2 comments:

  1. டேய் மச்சி சூப்பர்ட.. கட்டதுரையோட சேஷ்டைகளை படிக்கும்போது.சே ஏந்தான் நாமெல்லாம் சின்ன வயசில ரொம்ப நல்லவங்களா இருந்திட்டோமோன்னு தோணூது..

    ReplyDelete
    Replies
    1. மச்சி,சூப்பர ஓகே, அது என்ன நாமெல்லாம் சின்ன வயசில ரொம்ப நல்லவங்களா இருந்திட்டோம் #இரு இரு அடுத்த பதிவு உனக்கு வைக்கிறேன்:-))

      Delete