Thursday, March 7, 2013

எந்தன் உயிர் தோழியே..!!

     இந்த சனியனுக்கு லெட்டர் எழுதவோ படிக்கவோ தெரியாது, இன்னைக்கு தோழி க்யூட் புஷ்பாவிற்கு (@cutepushpa) பிறந்தநாள். இப்போ தோழிக்கு லெட்டர் எழுதணும்னு ஆசைப்படுறேன். இப்போ நான் புஷ்பாக்கிட்டேயே  சொல்ல, புஷ்பாவே எழுதப்போறாங்க.!

நட்புக்காக நானே காட்டில மேட்டில அலஞ்சு தேடி எடுத்த ரோஜா..!!


(அழாதடா புய்ப்பா கண்ணை தொடச்சுக்கோ)

சனியன்: க்யூட் புஷ்பா தோழமையோடு நண்பன் நான், நான் எழுதும் மொக்க, ச்சி கவிதை லெட்டர், மடல் இல்ல கடிதாசி வச்சுக்கலாமா இல்ல கடிதமே இருக்கட்டும், எங்க படி.?

புஷ்பா: க்யூட் புஷ்பா தோழமையோடு நண்பன் எழுதும் கடிதமே...

சனியன்: ஹஹஹஹா பாட்டா படிக்க சொன்னா, பாடமாவே படிச்சிட்டியா..?  அப்போ நானும்... முதல்ல க்யூட் போட்டல்ல இப்பவும் க்யூட்டே போட்டிரு (ஆசையபாரு) க்யூட்டு உங்க வீட்டில் சவுக்கியமா.? நான் இங்கு சவுக்கியம்.

புஷ்பா: க்யூட்டு உங்க வீட்டில் சவுக்கியமா நான் இங்கு சவுக்கியமே.!

சனியன்: ஆஹோ ஓஹா  உன்னை நினச்சு பாக்கும் போது மொக்கை மனசில அருவி மாதிரி கொட்டுது, ஆனா அதை எழுதணும்னு உக்காந்த அந்த போட்டோ, டிபி...

புஷ்பா: உன்னை எண்ணி பார்க்கையில் மொக்கை மனசில கொட்டுது (பாவி என் கையாலையே என்னை திட்ட வச்சிட்டானே) 

சனியன்: அதான்...

புஷ்பா: அதை எழுத நினைக்கயில் டிபி தடுக்குது...

இந்த டிபி தான் தடுக்குது 


சனியன்: அதேதான் ஆஹா பிரமாதம் கருமம் கருமம் ச்சீ கவிதை கவிதை..!! படி..

சனியன்: ம்ம்ம்ம் எனக்கு உண்டான நட்பு அது தன்னால வளர்த்திடும், அது என்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல எனக்கு பொண்ணுங்ககிட்ட நட்புன்னாலே தானாவே வளர்ந்திடுது (உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது). இதையும் எழுதிக்க, நடுவில நடுவில  மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டுக்கணும் (இது வேறையா) இதை பாரு என்னை யாரு கழுவி ஊத்துனாலும் என் உடம்பு தாங்கிடும் உன் உடம்பு தாங்கிடுமா.?? புய்ப்பா, புய்ப்பா, புய்ப்பா 

புஷ்பம்: அதையும் எழுதணுமா..??

சனியன்: இது நட்பு... என் நட்பு என்னான்னு சொல்லாம ஏங்க, ஏங்க அழுகையா வருது. ஆனா நான் அழுது என் சோகம் உன்னை சந்தோசப்படுத்திடுமோன்னு நினைக்கும் போது, வர்ற சோகம் கூட நின்னிடுது ஹாஹாஹா....
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித நட்பு அல்ல, அதையும் தாண்டி கொடூரமானது......கொடூரமானது.....

புஷ்பா: உண்டான அசிங்கம் எல்லாம் தன்னாலே மாறிப்போன மாயம் என்ன ஏய் சனியா ஏய் சனியா, என்ன அசிங்கம் ஆன போதும் உன் நெஞ்சம் தாங்கி கொள்ளும் எந்தன் நெஞ்சம் தாங்காது தாங்காது..... (ஆமா இதுக்கு மேல எழுதினா தாங்காது)

சனியன்: குடுத்த டைம் முடிஞ்சு போச்சு அப்பிடியே ஓடிரு..!!  



உனது வாழ்கையில் உன் எல்லா விருபங்களும் நிறைவேற..!!
உன் வாழ்வில் மிகச்சிறந்த நாள் இன்னும் வர..!!
உன் தாய், தந்தை உன்னை பெற்றதற்கு பெருமைப்பட..!!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!!

4 comments:

  1. Replies
    1. நன்றீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ;-))

      Delete
  2. மச்சி.... சிரிச்சு மாலல....! செம கலக்குற போ...!
    ஆமா எங்க எத்தன பேருக்கு இப்படி பொறந்த நாள் வந்துருக்கும்.. ஆறுக்காச்சும் இப்படி எழுதி இருக்கியா நீ???

    ஆனாலுமுன் காமெடி சென்ஸ் பிரமாதம்...!
    லாஓசி!

    ReplyDelete
  3. ஓவரா வர்ணிக்குறியேடா.! இது தெரிஞ்சு இருந்தா டீ கூட வடையும் வாங்கி குடுத்திருப்பேனே ஆவ்வ்வவ்வ்வ் #நன்றி மச்சி..!!

    ReplyDelete